நாளைய தினம் இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப் 14 மூலம் இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 2 மணி அளவில், ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டுக்கான 27.5 மணி நேர கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5:30 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோள் மொத்தம் 2275 கிலோ எடை கொண்டது. வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக வழங்குவதற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.