இஸ்ரோவின் கார்டோசாட் செயற்கைக்கோள் பாதுகாப்பாக பூமிக்குள் விழ வைக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தன்று இந்திய பெருங்கடலுக்குள் கார்டோசாட் பாதுகாப்பாக விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 10, 2007 ஆம் ஆண்டு, கார்டோசாட் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் செயல்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. அதன் பின்னர், செயற்கைக்கோளின் சுற்றுவட்ட பாதை தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டு, பூமிக்குள் பத்திரமாக விழ வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2020ல் கணிக்கப்பட்ட சரியான நேரத்தில் இது பூமிக்குள் விழுந்து உள்ளது. முதன்முதலில், செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட சமயத்தில், அது சுற்றுவட்ட பாதையில் இருக்கும் மொத்த வருடங்கள் 30 என சொல்லப்பட்டது. ஆனால், செயற்கைக்கோள் செயல் இழந்த பிறகு, அதில் எஞ்சியிருந்த எரிபொருளை பயன்படுத்தி, செயற்கைக்கோளை முன்கூட்டியே பூமியில் விழ செய்து, இஸ்ரோ சாதித்துள்ளது.