ரஷ்ய எதிர்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி சிறையில் மரணமடைந்தார்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னி அரசுக்கு எதிராக செயல்பட்டதாக புதின் அரசால் குற்றம் சாட்டப்பட்டார். அதனால் அவருக்கு 19 வருட கால சிறை தண்டனை அளிக்கப்பட்டது. பின்னர் ரஷ்ய சிறைச்சாலைகளில் மிக மோசமானதாக எண்ணப்பட்ட ஆர்டிக் பீனல் காலனி என்னும் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு வயது 47. இந்நிலையில் மாவட்ட சிறைத்துறை அலெக்ஸி சிறையில் மயக்கம் அடைந்ததாகவும், அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அது பலன் இன்றி அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் அளித்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து சரியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இந்த தகவல் குறித்து விளக்கம் அளிக்க நவால்னியின் வழக்கறிஞர் லியோனெட்டு மறுத்துவிட்டார்.
இதற்கிடையே நவால்னியின் மரணத்திற்கு புடின் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.