நிலவுக்கு செல்லும் கலத்தில், இந்து துறவி பிரமுக் சுவாமி மஹராஜ் பற்றிய எழுத்து பொறிப்பு - நாசா

February 20, 2024

நாசாவின் தனியார் விண்கலம் ஒடிசஸ் நிலவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. வரும் 22ஆம் தேதி இது நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், ஒடிசஸ் கலத்தில், இந்து துறவி பிரமுக் சுவாமி மகராஜ் பற்றிய எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது. இந்து சமயத்தை சேர்ந்த துறவி பிரமுக் சுவாமி மகராஜ் கடந்த 1921 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் மானுடர்களுக்கு எண்ணற்ற உதவிகள் மற்றும் ஆன்ம ஞானத்தை வழங்கி உள்ளார். அவரது தன்னலமற்ற தியாகத்தை […]

நாசாவின் தனியார் விண்கலம் ஒடிசஸ் நிலவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. வரும் 22ஆம் தேதி இது நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், ஒடிசஸ் கலத்தில், இந்து துறவி பிரமுக் சுவாமி மகராஜ் பற்றிய எழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.

இந்து சமயத்தை சேர்ந்த துறவி பிரமுக் சுவாமி மகராஜ் கடந்த 1921 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் மானுடர்களுக்கு எண்ணற்ற உதவிகள் மற்றும் ஆன்ம ஞானத்தை வழங்கி உள்ளார். அவரது தன்னலமற்ற தியாகத்தை போற்றும் வகையில், மரியாதை நிமித்தமாக, ஒடிசஸ் கலத்தில் அவரது வாழ்நாள் சாதனை மற்றும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். - இவ்வாறு இன்டியூடிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu