முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் பீகாரில் சுற்றுப்பயணம்

February 20, 2024

லாலு பிரசாத் யாதவ் மகனும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட உள்ளார். பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் […]

லாலு பிரசாத் யாதவ் மகனும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் தனது பயணத்தை இன்று தொடங்குகிறார். இவரது பயணம் 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 29ஆம் தேதியுடன் பயணம் நிறைவடைகிறது. இந்த பத்து நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் அவர் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். மேலும் 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu