நாசா இன்டியூட்டிவ் மெஷின்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஒடிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் நேற்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த 1972 ம் ஆண்டு, அமெரிக்கா நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன் பிறகு, தற்போது, வெற்றிகரமாக அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்கி உள்ளது. அத்துடன், நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் தனியார் நிறுவனத்தின் கலம் என்ற பெருமையை ஒடிசியஸ் பெறுகிறது. மலபார்ட் ஏ கிரேட்டர் பகுதியில் ஒடிசியஸ் தர இயங்கி உள்ளது. தரையிறங்கும் நேரம் நெருங்கும் போது, சில இணைப்பு சிக்கல்கள் நிகழ்ந்தன. ஆனாலும், விண்கலம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக இன்டியூட்டிவ் மெஷின்ஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலவு திட்டம் ஒரு வணிக திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.