நேபாளத்தில் நாடு முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி போட அரசு முடிவு செய்துள்ளது.
நேபாளத்தில் சுமார் 57 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வருகிற மார்ச் 20ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் இந்திய எல்லை மற்றும் காட்மண்டு பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட 3 மாவட்டங்கள் அதிகம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களாக கருதப்படுகிறது. மொத்தம் 24 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் 48,798 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 49,937 சுகாதார பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன்படி 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர மீதமுள்ள 53 மாவட்டங்களை சேர்ந்த 9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். இதற்காக பள்ளிக்கூடங்களில் மையம் அமைக்கப்படுகிறது. இந்தப் பணியில் 59,906 தன்னார்வலர்கள் பங்கு பெறுகிறார்கள்.