அரபு நாடுகளில் உள்ள சிறை கைதிகளை விடுவிப்பதற்கு 2.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரோஸ் மெர்சன்ட் என்ற தொழிலதிபர் இந்த தொகையை வழங்கி உள்ளார்.
பிரோஸ் மெர்சன்ட், பியூர் கோல்ட் ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபாயில் வசித்து வரும் இவர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நன்கொடை வழங்கி உள்ளார். மொத்தம் ஒன் மில்லியன் தினார்களை அவர் கொடையாக வழங்கியுள்ளார். அதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் செலவையும் பிரோஸ் மெர்சன்ட் ஏற்றுக் கொண்டுள்ளார். அத்துடன், நிகழாண்டு இறுதிக்குள் 3000 கைதிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.