டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அம் மாநிலத்தின் இரண்டு மந்திரிகள் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மாநில முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமன் அனுப்பி வருகிறது. இது தொடர்பாக தான் தவறு செய்யவில்லை எனவும், அவரது வீட்டில் சோதனை சோதனை நடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் கைது செய்வதுதான் அமலாக்க துறையின் குறிக்கோள் என குற்றம் சாட்டி வருகிறார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எட்டாவது முறையாக மார்ச் 4ஆம் தேதி ஆஜராகும்படி மீண்டும் அமலாக்கத்துறை சமன் அனுப்பியுள்ளது.