பார்ஸிலோனாவில், நிகழாண்டிற்கான சர்வதேச மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பல நிறுவனங்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், குவால்கம் நிறுவனம் முக்கிய அறிவிப்பை கூறியுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறியுள்ளது.
இந்திய சந்தையில் 10000 ரூபாய்க்கு ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம், இந்தியாவில் குறைந்த செலவில் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். ஜியோ நிறுவனம் உருவாக்கும் 5ஜி கைபேசியில் எங்களது குவால்கம் நிறுவனத்தின் நவீன சிப்செட் பொருத்தப்படுகிறது. - இவ்வாறு குவால்கம் நிறுவன பொது மேலாளர் கிரிஸ் பேட்ரிக் கூறியுள்ளார்.