கங்கை நதியில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் புனித நதிகளில் ஒன்றான கங்கை இமயமலையில் உருவாகி பல மாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்காளக் கடலில் கலக்கிறது. இங்கு நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடி வருகின்றனர். இந்நிலையில் கங்கை ஆற்றின் மேற்குவங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதி இல்லாத இடமாக மாறி உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் வரவல் அதிகமாக இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றை மீறினால் மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.