கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோள், பூமிக்கு புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது. இஸ்ரோ இந்த தகவலை பகிர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில், புதிய தொழில்நுட்பத்துடன் பூமியை புதிய வண்ணங்கள் மற்றும் கோணத்தில் இன்சாட் 3டி எஸ் படம் பிடித்துள்ளது. வெவ்வேறு அலைக்கற்றைகளில், வெவ்வேறு ஸ்பெக்ட்ரம் அளவீடுகளில் பூமியின் பகுதிகளை இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோளில் உள்ள புகைப்பட கருவி படம் பிடித்துள்ளது. குறிப்பாக, வளிமண்டலத்தில் உள்ள நீராவி அளவைப் பொறுத்து அதன் புகைப்படங்களில் மாற்றங்கள் தெரிகின்றன. இதன் மூலம், துல்லியமான வானிலை முன்னறிவிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இன்சாட் 3 டி எஸ் எடுத்து அனுப்பியுள்ள இந்தியாவின் புகைப்படம், அதிக கவனம் பெற்று வருகிறது.