வாட்ஸ் அப் செயலியில் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு மேம்படுத்தல் அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இனிமேல் வாட்ஸ் அப் டிபி புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது. இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த செயல்பாட்டை தவிர்க்க முடியாது அல்லது மாற்றம் செய்ய முடியாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவர்களது புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் அம்சம் இனிமேல் தடை செய்யப்படுகிறது. இதனால், ஒருவரின் புகைப்படத்தை தவறான முறையில் பயன்படுத்தும் சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அத்துடன், வாட்ஸ் அப் செயலியின் சமீபத்திய அப்டேட் மட்டுமல்லாது முந்தைய வெர்ஷன்களிலும் இந்த அம்சம் புகுத்தப்பட்டுள்ளது. அதனால், வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளது.