மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை கலைப்பதாக அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்காக அமைக்கப்பட்ட இடைக்கால கமிட்டியை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் மூன்று பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க அமைத்தது. இந்தக் குழுவானது வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த குழுவினை கலைப்பதாக இந்திய […]

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்காக அமைக்கப்பட்ட இடைக்கால கமிட்டியை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் மூன்று பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க அமைத்தது. இந்தக் குழுவானது வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த குழுவினை கலைப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் தேசிய மல்யுத்த கூட்டம் அமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு இந்த தற்காலிக குழு அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த விளையாட்டு நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu