ஏற்ற இறக்க பாதையில் பயணித்து வரும் இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 539.5 புள்ளிகள் உயர்ந்து 72641.19 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 172.86 புள்ளிகள் உயர்ந்து 22011.95 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது
இன்றைய வர்த்தகத்தில், பிபிசிஎல், என்டிபிசி, பவர் கிரிட், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஏர்டெல், எச்டிஎப்சி லைஃப், ஓ என் ஜி சி, மாருதி சுசுகி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.














