காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்று ஐநா சபையில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த வாக்கெடுப்பை அமெரிக்கா புறக்கணித்துள்ளது. இதற்கு முன்பு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 14 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இதனால் காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது நீண்ட போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகிறது. அதோடு ஹமாஸ் மற்றும் பிற பிணை கைதிகளை விடுவிக்கவும் அது கோரிக்கை வைத்துள்ளது.
இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இஸ்ரேல் அதை பொருட்படுத்தவில்லை. எனவே அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. அதன் வெளிப்பாடாகவே ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.