ஆடி நிறுவனத்தின் மின்சார கார்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆடி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் குறிப்பிட்ட வகை பெட்ரோல் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, ஆடி நிறுவனத்தின் மின்சார கார்களையும் இந்தியாவில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. “கார்களுக்கு தேவையான பாகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் வாகனமாக கட்டமைப்பு செய்யப்படும்” என ஆடி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி நிறுவனத்தின் மின்சார கார்கள் தற்போது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தையில் விற்கப்படுகிறது. இந்த நிலையில், உள்நாட்டிலேயே மின்சார கார்களை கட்டமைப்பதன் மூலம், ஆடி நிறுவனத்தின் மின்சார கார் விலை பெருமளவு குறையும் என கருதப்படுகிறது.