திருமாவளவன் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பு

March 28, 2024

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதன்படி 6வது முறையாக விசிக தலைவர் ஆன தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட உள்ளார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான சின்னத்தை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி […]

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதன்படி 6வது முறையாக விசிக தலைவர் ஆன தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிட உள்ளார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான சின்னத்தை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி தங்கள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu