பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஆறாவது முறையாக மீண்டும் தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பிரதமர் மோடி ஐந்து தடவை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அதில் தமிழகத்தில் சென்னை, வேலூர் மாவட்ட பகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான பயணத்திட்டம் தயாராகி வருகிறது. மேலும் சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோவில் கலந்து கொள்ள உள்ளார்.