இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக பருவமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சராசரியாக இந்தியாவின் பருவமழை அளவு 87 சென்டிமீட்டர் ஆகும். இந்த ஆண்டு, அதை விட 106% கூடுதலாக பருவ மழை பொழிவு பதிவாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பருவமழை தொடங்கும் காலத்தில், எல் நினோ தாக்கம் வலுவிழக்கும் என்று மத்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்ஜெய் முகபத்ரா தெரிவித்துள்ளார். மேலும், லா நினா வானிலை மாற்றங்கள் உலகில் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், அதன்படி, ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் அதிக பருவ மழை பெய்யும் எனவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். கடந்த 1961 முதல் 2023 வரை, ஒவ்வொரு முறையும் எல் நினோவை தொடர்ந்து லா நினா வரும் பொழுது, இந்தியாவில் பருவமழை அதிகமாக பொழிந்துள்ளது. அதன்படி, இந்த வருடமும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.