இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கியதை முன்னிட்டு சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் கிட்டத்தட்ட 4.5% அளவுக்கு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நிகழாண்டில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. வெப்பநிலை உயர்ந்து வரும் சூழலில், இனிப்புகள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு மற்றும் தேவை உயர்ந்துள்ளது. கூடுதலாக, மக்களவைத் தேர்தலும் நடைபெற்று வருவதால் சர்க்கரை தேவை உச்சத்தை தொட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில், கரும்பு கொள்முதலுக்கான விலை குவிண்டாலுக்கு 340 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஆலைகளுக்கு விற்கப்படும் சர்க்கரை அளவு 2.5 மில்லியன் டன் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருடாந்திர அடிப்படையில் சர்க்கரை துறையில் 5.5% பணவீக்கம் பதிவாகியுள்ளது.