பெரும்பாலான அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வம்சாவளி மாணவியை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழக வம்சாவழியைச் சேர்ந்த அச்சிந்தியா சிவலிங்கம் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். அவர் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து இந்தியாவைச் சேர்ந்த ஹசன் சையத் என்ற மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.