இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 328.48 புள்ளிகள் உயர்ந்து 73104.61 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 113.8 புள்ளிகள் உயர்ந்து 22217.85 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், எல் அண்ட் டி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், என் டி பி சி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், சிப்லா, டிசிஎஸ், நெஸ்லே, டாடா கன்சியூமர், ஆக்சிஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், ஐடிசி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.