ரபா நகர் மீது தாக்குதல் தொடரும் என்றும் கூடுதல் ராணுவ படைகள் ரபா நகருக்குள் வர உள்ளன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார்.
ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்த தொடங்கிவிட்டது. இதனால் சுமார் 6 லட்சம் மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து முகாமிற்கு சென்றுள்ளனர் என்று ஐநா கூறியுள்ளது. ரபா நகர் மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் சிறிய அளவிலான வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரபா நகர் மீது தாக்குதல் தொடரும் என்றும் கூடுதல் ராணுவ படைகள் ரபா நகருக்குள் வர உள்ளன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார்.
அதோடு ரபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்களை அழித்து விட்டதாகவும், 20க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே காசா முனையின் மற்ற பகுதிகளில் உள்ள ஹமாஸ் குழுவினர் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெவனனிலிருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி தாக்கப்பட்டதாக ஹிஸ்ஃபுல்லா தெரிவித்துள்ளது.