நாகப்பட்டினம் இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

May 17, 2024

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த சேவைக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கடந்த அக்டோபர் 20ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை […]

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது மே 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த சேவைக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கடந்த அக்டோபர் 20ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை மே மாதத்தில் மீண்டும் தொடங்குவதாக இருந்தது. முதலில், மே 10ம் தேதி தொடங்க இருந்த திட்டம், மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது தற்போது 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu