தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடற்கரை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக 20ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழை வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது