காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்யவில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பலியானவர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்கும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.