ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையில் உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஈரான் அதிபர் ரெய்சியின் மரணத்திற்கு காரணமான இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்த நாடு நடத்தும் விசாரணைக்கு தேவையான உதவிகளை ரஷ்யா அளிக்க தயாராக உள்ளது. இந்த துயரமான சம்பவத்திற்கான காரணத்தை ஈரான் தெரிந்து கொள்ள எங்களால் முடிந்த அனைத்து நிபுணத்துவ உதவிகளையும் செய்ய இருக்கிறோம். அவருடைய மரணம் ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவர் ரஷ்யாவின் சிறந்த நண்பர். இவ்வாறு புதினும் கூறினார். இப்ராஹிம் ரெய்சின் இறுதி சடங்கில் அதிபர் புதின் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விபத்து தொடர்பான விசாரணையில் உதவ அமெரிக்கா மறுத்துள்ளது.