2025 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7% அளவில் இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.6% ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது 7% ஆக கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறப்பான பொருளாதார செயல்பாடுகளின் காரணமாக, 7.6% அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி உயர்ந்து பதிவாகியுள்ளது. இந்த நிலையில், 2025 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 7% என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பான பொருளாதார செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில், இந்த நிதி ஆண்டிலும் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை விட உயர்ந்து பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.