டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
டெல்லியில் இன்று இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அக்கூட்டணியின் கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார்கள். நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதம் 57 தொகுதிகளுக்கு இன்று கடைசி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வரும் நான்காம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் இந்தியா கூட்டணி தலைவர் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்குபெறுமாறு கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டத்தில் திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு கலந்து கொள்ள உள்ளார்