நோவார்டிஸ் பார்மா புற்றுநோய் மருந்துக்கான உலகின் முதல் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

October 21, 2022

மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் ஒரு முக்கிய லுகேமியா சிகிச்சை மருந்துக்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று ஐ.நா ஆதரவு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது புற்றுநோய் மருந்துக்கான முதல் ஒப்பந்தமாகும். நாள்பட்ட மைலோயிட் லுகேமியா (சிஎம்எல்) சிகிச்சைக்கு தினசரி இரண்டு முறை வாய்வழி மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலோடினிபின் பொதுவான பதிப்புகளை உருவாக்கவும், தயாரிக்கவும் மற்றும் வழங்கவும் இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த மருந்து சிஎம்எல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக்கு மேற்பட்ட […]

மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் ஒரு முக்கிய லுகேமியா சிகிச்சை மருந்துக்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று ஐ.நா ஆதரவு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது புற்றுநோய் மருந்துக்கான முதல் ஒப்பந்தமாகும்.

நாள்பட்ட மைலோயிட் லுகேமியா (சிஎம்எல்) சிகிச்சைக்கு தினசரி இரண்டு முறை வாய்வழி மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலோடினிபின் பொதுவான பதிப்புகளை உருவாக்கவும், தயாரிக்கவும் மற்றும் வழங்கவும் இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த மருந்து சிஎம்எல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற மருந்து காப்புரிமைக் குழுவின் தலைவர், சி. ஹார்லஸ் கோர் கூறுகையில், "உயர்தர புற்றுநோய் மருந்துகளுக்கான அணுகல் உலகளாவிய புற்றுநோய் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஒரு பகுதியாகும்" என்றார். இந்த அமைப்பு ஏழை நாடுகளில் உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்கச் செய்வதை குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஹமீத் லத்தீஃப் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணரான ஸிபா ஆசிஸ் கூறுகையில், " லுகேமியாக்கான முதல் வரிசை சிகிச்சை மருந்தான இமாடினிபை எதிர்க்கும், சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு மாற்றாக நிலோடினிப் வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான உள்ள நாடுகளில் அதிகமான மக்கள் இந்த அத்தியாவசிய புற்றுநோய் மருந்தை பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

இந்த உரிமத்தில் ஏழு நடுத்தர வருமான நாடுகள் அடங்கும். அவை எகிப்து, குவாத்தமாலா, இந்தோனேஷியா, மொராக்கோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் துனிசியா ஆகும். இங்கெல்லாம் மருந்து தயாரிப்புக்கான காப்புரிமை நிலுவையில் அல்லது நடைமுறையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ஆன்காலஜி மருந்துகளுக்கான அணுகல் (ATOM) என்ற அமைப்பு வரவேற்றது. இது குறித்து இதன் இணைத் தலைவர் அனில் டி-குரூஸ் கூறுகையில், "இத்தகைய ஒப்பந்தம் தனியார் மற்றும் பொதுத்துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற வழி வகுக்கும் என்பதை நிரூபிக்கிறது" என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu