வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உரிய தமிழக பதவி எண் மற்றும் அனுமதிச்சீட்டு பெறாமல் இயங்கி வரும் ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்று கடந்த 14ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து சுற்றுலா வரும் பேருந்துகளுக்கான வரியை உயர்த்துவதற்காக தமிழக அரசுக்கு கேரள அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரள சட்டசபையில் பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கான மானியங்கள் மற்றும் வாகனங்கள் வரிவிதான விவாதம் நடைபெற்றது. அதில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவிற்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.