இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் ரோபோ நாய்கள்

இந்திய ராணுவத்தில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 100 ரோபோ நோய்களை தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் 25 ரோபோ நாய்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியா சீனா எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ரோபோ நாயும் 51 கிலோ எடை கொண்டதாகும். இவற்றால் 3.15 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்து செல்ல முடியும். மேலும், ஒவ்வொரு ரோபோ நாயிலும் 10 கிலோ வரையிலான […]

இந்திய ராணுவத்தில் ரோபோ நாய்கள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 100 ரோபோ நோய்களை தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் 25 ரோபோ நாய்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியா சீனா எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ரோபோ நாயும் 51 கிலோ எடை கொண்டதாகும். இவற்றால் 3.15 மணி நேரம் தொடர்ச்சியாக நடந்து செல்ல முடியும். மேலும், ஒவ்வொரு ரோபோ நாயிலும் 10 கிலோ வரையிலான ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் போன்றவற்றை சுமத்த முடியும். இந்த ரோபோ நாயை சார்ஜ் செய்வதற்கு மொத்தத்தில் ஒரு மணி நேரம் போதுமானது. அதிநவீன ரேடார் கருவிகள், கேமராக்கள் மற்றும் சென்சார்கள் ரோபோ நாயில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட தானியங்கி முறையில் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu