பெருவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

June 29, 2024

பெரு நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்கா நாடான பெருவில் நேற்று 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, பெருவின் கேரவல் மாகாணத்துக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் பசபிக் பெருங்கடல் பகுதியில் நேற்று காலை 11 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள […]

பெரு நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென் அமெரிக்கா நாடான பெருவில் நேற்று 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, பெருவின் கேரவல் மாகாணத்துக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் பசபிக் பெருங்கடல் பகுதியில் நேற்று காலை 11 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள இகா மற்றும் அயாகுசா போன்ற மாகாணங்களில் உணரப்பட்டது.

அயாகுசா மாகாணத்தில் சாங்கோஸ் என்ற மாவட்டத்தில் பாறைகள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலை போக்குவரத்து பாதித்ததாக கூறப்பட்டுள்ளது. உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. அதோடு சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட பின்னர் அது திரும்ப பெறப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu