னடா நாட்டில் பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக எக்ஸ் தளத்தில் காணொலி வெளியாகியுள்ளது. இணைய உலகில் இது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கனடாவில் உள்ள மானிடோபா மாகாணத்தில், வின்னிபெக் ஆற்றுக்கு மேலே பறக்கும் தட்டுகள் தென்பட்டு உள்ளன. அந்த பகுதியில் கார் பயணத்தில் ஈடுபட்ட தம்பதிகள் தங்கள் கைபேசியில் இதை படம் பிடித்து எக்ஸ் சமூக தளத்தில் பதிவேற்றி உள்ளனர். மொத்தம் 4 பறக்கும் தட்டுகள் அந்த காணொளியில் தெரிகின்றன. நெருப்பு பிழம்பு போல பிரகாசமாக அவை காட்சியளிக்கின்றன. இந்த காணொளி ஒரே நாளில் 6.5 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. உலக அளவில் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு மற்றும் பறக்கும் தட்டுகள் பற்றிய பல்வேறு உரையாடல்களை இது ஏற்படுத்தியுள்ளது.