நாட்டின் பல்வேறு பகுதிகளில், 'ஒமைக்ரான் பிஎப் 7' தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், 'ஒமைக்ரான் பிஎப் 7' என அழைக்கப்படும் தொற்று முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பல முறை உருமாறக்கூடியது. தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் தென்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக வேகமாக பரவும். எனவே முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற, கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
சளி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று கூறப்பட்டுள்ளது.