2022 ல், இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் 3.6 லட்சம் வீடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்ப்பு - வீடுகள் விற்பனையில் வரலாற்று உச்சம்

October 26, 2022

நடப்பு ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அதிகமான வீடுகள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரபல ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான அனராக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டில் 3.6 லட்சம் வீடுகள் இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் விற்பனையாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் வீடுகள் விற்பனை வரலாற்று உச்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு, வீடுகள் விற்பனை 342980 ஆக இருந்தது. இந்நிலையில், […]

நடப்பு ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் அதிகமான வீடுகள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிரபல ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான அனராக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டில் 3.6 லட்சம் வீடுகள் இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் விற்பனையாகும் என்று தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் வீடுகள் விற்பனை வரலாற்று உச்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு, வீடுகள் விற்பனை 342980 ஆக இருந்தது. இந்நிலையில், அந்த சாதனை நடப்பு ஆண்டில் முறியடிக்கப்படும் என்று அனராக் தெரிவித்துள்ளது. மேலும், அதிகரித்துள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் உயர்ந்துள்ள சொத்து மதிப்புகள் அனைத்தையும் தாண்டி முக்கிய நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதை இந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. குறிப்பாக, டெல்லி என் சி ஆர், மும்பையின் மெட்ரோபொலிட்டன் பகுதிகள், கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களை இந்த நிறுவனம் தேர்ந்தெடுத்து கணித்துள்ளது.

நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 272710 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2019 ஆம் ஆண்டில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட வீடுகள் எண்ணிக்கையை விட கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடந்த பண்டிகை காலத்தில், வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்ந்தது. அத்துடன், வீடுகளுக்கான விற்பனை விலையில் கடந்த வருடத்தை விட குறைந்தபட்சம் 10% உயர்வு காணப்பட்டது. ஆனாலும், வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனவே, நடப்பு நிலவரப்படி, இந்த வருடத்திற்குள் 3.6 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் விற்பனையில் வரலாற்று சாதனை இந்த ஆண்டு நிகழ்த்தப்படும் என்பதை அனராக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி தெரிவித்துள்ளார். “கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்த துறை பெரும் சரிவை சந்தித்தது. ஆனால், அடுத்த ஆண்டே மறுமலர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 254780 வீடுகள் கட்டப்பட்டுள்ளன” என்றார். இந்த துறையில் பிரஸ்டீஜ், மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ், டி எல் எப் மற்றும் கோத்ரேஜ் நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக, ஓபராய் ரியாலிட்டி, சோபா, மகேந்திரா லைஃப் ஸ்பேஸ், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட், பிரிகேட் என்டர்பிரைசஸ், புரவங்கரா, ஸ்ரீராம் ப்ராபர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu