கனமழை காரணமாக மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. மேலும்
இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மும்பையில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராய்காட் மற்றும் நவி மும்பையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் சில இடங்களில் ஜூலை 12-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது