காசா பள்ளி மீது வான்தாக்குதல் - 29 பேர் பலி

July 10, 2024

காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பலியாகினர். காசாவில் அப்சான் என்னும் பகுதியில் அல் ஹவுடா என்ற பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 29 பேர் பலியாகியுள்ளனர். இதில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யுனிஸ் நாசர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது சுமார் 2000 பேர் பள்ளியில் இருந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் காசாவில் […]

காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பலியாகினர்.

காசாவில் அப்சான் என்னும் பகுதியில் அல் ஹவுடா என்ற பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 29 பேர் பலியாகியுள்ளனர். இதில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள கான் யுனிஸ் நாசர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலின் போது சுமார் 2000 பேர் பள்ளியில் இருந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட நான்காவது பள்ளி இதுவாகும். உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பாலசீன ஊடகம் தெரிவிக்கிறது. அல் ஹவுடா பள்ளிக்கு அருகில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாகவும் அதனாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனியன்று அல் ஜாவினி என்ற பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu