கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குடியிருப்பு பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வந்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினரை ஒழிப்பதாக கூறி அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல் வந்துள்ளது. மேலும் 400 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுவரை காசா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,584 ஆக உயர்ந்தது. சுமார் 88 ஆயிரத்து 800 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.














