சுமார் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றியதாக விஞ்ஞானிகள் புதிய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் முதல் முதலாக தோன்றிய உயிரினம் LUCA (Last Universal Common Ancestor) என்று அழைக்கப்படுகிறது. ஒற்றை செல் கொண்ட சிறிய உயிரினமாக இது இருந்திருக்கிறது. அப்போதைய பூமியின் அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் அதீத திறன் கொண்டதாக இருந்திருக்கிறது. இந்த ஒற்றை செல் உயிரினத்தில் இருந்து தான் தற்போது பூமியில் காணப்படும் அனைத்து விதமான உயிரினங்களும் தோன்றியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்காலத்தில் பூமியில் காணப்படும் எல்லாவிதமான உயிரினங்களின் மரபணுக்களை ஆய்வு செய்து இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்ணுயிர் புதைப்படிமங்கள் கிடைத்துள்ளன. ஆனால், விஞ்ஞானிகள் 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் நுண்ணுயிர்கள் இருந்திருக்கலாம் என ஆய்வு மூலம் கூறுகிறார்கள். சயின்ஸ் அலர்ட் இதழில் இது பற்றிய விரிவான அறிக்கை இடம்பெற்றுள்ளது.