குரோஷியாவில் முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி

July 23, 2024

குரோஷியா நாட்டில் முதியோர் இல்லம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறு பேர் பலியாகினர். குரோஷியோ நாட்டில் தாருவார் என்ற நகர் உள்ளது. இங்கு உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்ட போதிலும் உணவு விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார். இது குறித்து […]

குரோஷியா நாட்டில் முதியோர் இல்லம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறு பேர் பலியாகினர்.

குரோஷியோ நாட்டில் தாருவார் என்ற நகர் உள்ளது. இங்கு உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்ட போதிலும் உணவு விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துறை தலைவர் நிக்கோலா கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த ஐந்து பேர் பலியாகினர். ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார். மொத்தம் ஆறு பேர் பலியாகி உள்ளனர். ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கடந்த காலத்தில் இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் ராணுவ படை பிரிவில் ஒருவராக இருந்துள்ளார். பதிவு செய்யப்படாத துப்பாக்கியையும் வைத்துள்ளார். இவர் எதனால் சுட்டார் என்பது குறித்து தீவிர விசாரணைப் பின்னரை கூற முடியும் என்றார். இந்த சம்பவத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் ஆண்டிரேஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu