விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அளவை தற்போது 17 சதவீதமாக இருக்கும் நிலையில் அதனை 19% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக இருக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தொடர் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவு 17 சதவீதத்துக்கு மேல் இருந்ததால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
இந்நிலையில் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய அரசு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகையானது தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு மட்டும் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சலுகை அளித்த மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதி௫ப்பி அளிப்பதாக மற்ற பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.