இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து அமெரிக்கா ஜி 7 நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ஈரான் மற்றும் ஹிஸ்ஃபுல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இது மத்திய கிழக்கு பிராந்திய போராக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலும் ஈரானும் எந்த நேரத்திலும் மோதிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானின் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உளவு அமைப்புகளான மொசாட் மற்றும் ஷின் பெட்டின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலேண்ட் மற்றும் பாதுகாப்பு படை தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி 7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது போர் மூளாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை செய்தனர்.