விண்வெளியில் சுனிதா வில்லியம்சுக்கு சிக்கல்

பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படுவதால் விண்வெளி வீரர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு எழும் என்ற கவலை எழுந்துள்ளது. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்கு சென்றார். அவர் பூமிக்கு திரும்புவதில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சரி செய்ய நாசாவும் போயிங் நிறுவனமும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நாசாவின் சமீபத்திய தகவலின்படி இந்த இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் […]

பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படுவதால் விண்வெளி வீரர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு எழும் என்ற கவலை எழுந்துள்ளது.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்கு சென்றார். அவர் பூமிக்கு திரும்புவதில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை சரி செய்ய நாசாவும் போயிங் நிறுவனமும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நாசாவின் சமீபத்திய தகவலின்படி இந்த இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதை உறுதி செய்து வருகிறது நாசா. இருப்பினும் எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை பயன்படுத்தி 2025-ல் அவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது.

இவ்வாறு தாமதம் ஏற்படுவதால் விண்வெளி வீரர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பு எழும் என்ற கவலை எழுந்துள்ளது. விண்வெளியில் உள்ள செயற்கை சூழல் சவாலாக இருக்கும். அவர்கள் மீது கதிர்வீச்சு தாக்கம் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சீரான ஈர்ப்பு விசை இல்லாததால் எலும்பு மஜ்ஜை இழப்பு ஏற்பட்டு எலும்புகள் பலவீனம் ஆகும். தசைகளிலும் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி பயம் மற்றும் அமைதியின்மையால் ஒருவித பதற்றமும் ஏற்படலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu