கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 16 நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 9-ந்தேதி முதல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக சாலியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தேடுதல் பணி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. அடையாளம் காணாத 401 உடல்கள் மற்றும் உடல் உறுப்புகள் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 248 உடல்கள் 121 ஆண்கள் மற்றும் 127 பெண்களுக்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்டன. இந்நிலையில் நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு, மாதம் ரூ.6,000 வீதமாக வாடகை வழங்கப்படும் என்றும் கேரள மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.