பைஜூஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனமான திங் அண்ட் லேர்ன் நிறுவனம், தனது ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளத்தை வழங்கவில்லை. தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் விளைவாக சம்பளங்கள் வழங்கப்படவில்லை என்று பைஜூ ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி, BCCI க்கான 158.9 கோடி தீர்வை அங்கீகரித்து, பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிரான திவால் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த கடன் வழங்குநர் கிளாஸ் டிரஸ்ட் கம்பெனி எல்எல்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் விளைவாக, நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், ஜூலை மாத சம்பளம் வழங்கப்படவில்லை. கணக்குகளின் கட்டுப்பாடு மீட்டெடுக்கப்பட்ட உடன், ஊழியர்களுக்கான சம்பளம் உடனடியாக செலுத்தப்படும். இவ்வாறு பைஜூ ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.