இலங்கை தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் செலவுகள் ஒழுங்காற்று சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக வேட்பாளர் ஒவ்வொருவரும் அதிகப்பட்சமாக தலா ரூ.109 ரூபாய் வரை செலவழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வேட்பாளர் மொத்தம் ரூ.186.83 கோடி வரை செலவழிக்க முடியும். இதில் 60 சதவீதத்தை வேட்பாளர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 40 சதவீதம் கட்சிகளிடமிருந்து பெற்று செலவழிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 21 நாட்களுக்குள் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.