டாபர், தென் இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை நிறுவ ரூ. 400 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தமிழ்நாட்டின் திண்டிவனம், சிப்காட் உணவு பூங்காவில் அமைக்கப்படும். ஆரம்பத்தில் ரூ. 135 கோடியுடன் தொடங்கும் இந்த திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 400 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 250 நேரடி வேலை வாய்ப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இந்த திட்டம், தென்னிந்திய சந்தையில் டாபரின் இருப்பை மேம்படுத்தும். மேலும், உள்ளூர் விவசாயிகளுக்கு புதிய விவசாய வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் TRB ராஜா மற்றும் டாபரின் சிஇஓ மோகித் மல்ஹோத்ரா ஆகியோர், இந்த திட்டத்தின் நேர்மறையான பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை முன்னிலைப்படுத்தி பேசி உள்ளனர்.