இன்று பூமிக்கு மிக அருகில் வரும் UW10 விண்கல் - நாசா எச்சரிக்கை

October 31, 2022

இன்று பூமிக்கு மிக அருகில் UW10 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் நேராது எனவும், இந்த விண்கல் பூமியை கடந்து சென்று விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் வருவதால், பாதிப்புகள் நேரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாசாவின் விண்வெளி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த விண்கல் கடந்து செல்லும் நிகழ்வை சிவப்பு கொடியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. UW10 […]

இன்று பூமிக்கு மிக அருகில் UW10 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் வர உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு மோசமான பாதிப்புகள் எதுவும் நேராது எனவும், இந்த விண்கல் பூமியை கடந்து சென்று விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் வருவதால், பாதிப்புகள் நேரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாசாவின் விண்வெளி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த விண்கல் கடந்து செல்லும் நிகழ்வை சிவப்பு கொடியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

UW10 விண்கல்லானது, மணிக்கு 23976 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. இது அப்பல்லோ விண்கல் குழுமத்தை சேர்ந்ததாகும். இது பற்றி அக்டோபர் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த விண்கல் சூரியனை ஒரு முறை சுற்றிவர 915 நாட்கள் ஆகும். அதன் சுற்றுவட்ட பாதையில், சூரியனிலிருந்து, அதிகபட்சமாக 403 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும், குறைந்தபட்சமாக 149 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும் அந்த விண்கல் இருக்கும்.

இன்றைய தேதியில், பூமியில் இருந்து வெறும் 1.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இந்த விண்கல் வர உள்ளது. இது பூமியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படாது. எனவே, இதனால் பூமிக்கு ஆபத்து நேர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. எனினும், அவ்வாறு நேரும் பட்சத்தில், பாதிப்புகள் ஏற்படலாம் என நாசா எச்சரித்துள்ளது. இது போன்ற விண்கல் விளைவினால் டைனோசர்கள் மொத்தமாக அழிந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu